கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க... பிள்ளையார்சுழி போட்டாச்சு! நனவாகும் நடுத்தர மக்களின் உயர் சிகிச்சை கனவு

தினமலர்  தினமலர்
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க... பிள்ளையார்சுழி போட்டாச்சு! நனவாகும் நடுத்தர மக்களின் உயர் சிகிச்சை கனவு

கோவை;கோவையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசிடம் மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. அதற்கான சாத்தியக்கூறு அதிகளவில் இருப்பதாக, மருத்துவ துறையினர் தெரிவிக்கின்றனர்.தொழில்நகரமான கோவை, சமீபகாலமாக மருத்துவ சுற்றுலாவிலும், தனி இடத்தை பிடித்து வருகிறது.

அனைத்து நோய்களுக்குமான சிகிச்சைகள் கிடைப்பதால், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானோர் ஆண்டுதோறும் பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர்.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி, மாநகராட்சி மருத்துவமனைகளுடன், ஏராளமான தனியார் மருத்துவமனைகளும்செயல்பட்டு வருகின்றன. கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ வசதிகளுக்காக, ஜப்பான் நாட்டின் நிதியுதவியும் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் டில்லி சென்றிருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்த, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தினார். கோரிக்கை ஏற்கப்பட்டு, நிதி ஒதுக்கி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டால், கோவைக்கு தேவையான நவீன மருத்துவ வசதிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்கு அவசியம் தேவை. இங்கு அமையும் பட்சத்தில் கோவை மக்களின் உயர் மருத்துவ தேவை பூர்த்தியாகும். இங்குள்ள நடுத்தர, உயர் வகுப்பு மக்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும். ஒரே மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் திரள்வதை தவிர்க்கலாம். தரமான சிகிச்சையும் சாத்தியப்படும். அரசு டாக்டர்களின் திறமையை பயன்படுத்த வழி ஏற்படும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் உள்ளன,'' என்றார்.

'மத்திய அரசிடம் பேசுவேன்'கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறுகையில், ''பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற, பல்வேறு பகுதிகளிலும், மருத்துவ கல்லுாரிகளை மத்திய அரசு துவக்கி வருகிறது. கோவையில் அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளது. இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, மருத்துவக் கல்லுாரியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன. கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து, மத்திய அரசிடம் பேசி, தேவையான நடவடிக்கை மேற்கொள்வேன்,'' என்றார்.

கோவை;கோவையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசிடம் மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. அதற்கான சாத்தியக்கூறு அதிகளவில் இருப்பதாக, மருத்துவ துறையினர்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை