பட்டுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி மின்ஊழியர் மரணம்!: உறவினர்கள் சாலை மறியல்..!!
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ராமச்சந்திரனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மின்கம்பத்தில் ஏறி பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ராமசந்திரன் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி ராமசந்திரன் உயிரிழந்த நிலையில் இதுவரை அதிகாரிகள் யாரும் பார்க்க வராததற்கு கண்டனம் தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.