இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆப்கனில் கடத்தல்

தினமலர்  தினமலர்
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆப்கனில் கடத்தல்

காபூல்: ஆப்கனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பன்ஸ்ரீ லால் அரன்தே மருந்து சார்ந்த பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் டில்லியில் உள்ளனர். இவர் நேற்று காலை 8 மணியளவில், கடையில், ஊழியருடன் இணைந்து வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, கடைக்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் இருவரையும் கடத்திச் சென்றனர். ஆனால், கடை ஊழியர் அவர்களிடம் இருந்து தப்பி வந்தார். இருவரையும், கடத்தல்காரர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர்.



இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் விசாரணை அமைப்பினர், இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காபூல்: ஆப்கனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை