‘ஸொமாட்டோவுக்கு இணை நிறுவனர் குட்பை’

தினமலர்  தினமலர்
‘ஸொமாட்டோவுக்கு இணை நிறுவனர் குட்பை’

புதுடில்லி:முன்னணி உணவு வினியோக நிறுவனமான, ‘ஸொமாட்டோ’வின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா, பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸொமாட்டோ ஊழியர்களுக்கு அவர் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில், ஆறு ஆண்டுகளுக்குப் பின், நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாகவும்; புதிய அத்தியாயத்தை துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குப்தா, கடந்த 2015ம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்தார். வினியோகப் பிரிவின் தலைமை பொறுப்பை அவர் வகித்து வந்தார்.அதன்பின் 2019ல் அவர் இணை நிறுவனராக உயர்த்தப் பட்டார்.அவர் அனுப்பி இருக்கும் மின்னஞ்சலில், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், ஸொமாட்டோவில் பணிபுரிந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுஉள்ளார்.

ஸொமாட்டோ நிறுவனம், அதன் மளிகை பொருட்கள் வினியோக சேவையை சரிவர செயல்படுத்த முடியாததால், அதை நிறுத்திக் கொள்வதாக சில நாட்களுக்கு முன் தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை