விஜிபி குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீது பண மோசடி வழக்கு
சென்னை: விஜிபி குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜிபி பாபுதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்னா ராவ் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.