மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.84 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 18,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,84,446-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 481 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 36,662-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 10,88,322 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 2,59,033 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை