பாரிஸ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பலத்த சத்தம்

தினமலர்  தினமலர்
பாரிஸ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பலத்த சத்தம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றி ஒலித்த பலத்த சத்தத்தால், மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஆனால் அது, அதிநவீன போர் விமானத்தின் சத்தம் என போலீசார் விளக்கமளித்தனர்.

ஓரிரு வினாடிகள் நீடித்த இந்த சத்தம், பாரிசில் குண்டுவெடித்ததால் ஏற்பட்டது என மக்கள் அஞ்சினர். இந்த சத்தம் காரணமாக பாரிசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியும் சில வினாடிகள் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், பாரிஸ் நகரம் முழுவதும் பலத்த சப்தம் கேட்டது. குண்டு ஏதுவும் வெடிக்கவில்லை. அதிநவீன போர் விமானத்தால் எழுந்த சப்தம். மக்கள் அச்சப்பட தேவையில்லை நகரம் முழுவதும் கேட்டதாக தெரிவித்தனர்.

இந்த சத்தம் காரணமாக வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் கூறியுள்ளனர். இந்த சத்தத்தை பாரிசின் சுற்றுவட்டார பகுதிகளிலும் கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை