கடலுாரில் 276 பேர் 'டிஸ்சார்ஜ்'

தினமலர்  தினமலர்
கடலுாரில் 276 பேர் டிஸ்சார்ஜ்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், நேற்று 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 427 ஆக உயர்ந்தது.

கடலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 19 ஆயிரத்து 215 பேர். நேற்று 212 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.நேற்று 276 பேர் குணமடைந்ததால், இது வரை 17 ஆயிரத்து 653 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த1,436 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுவரை ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 713 பேருக்கு பரிசோதனை செய்ததில், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 836 பேருக்கு தொற்று இல்லை. 3,450 பேருக்கு முடிவுகள் வரவேண்டும். மாவட்டத்தில் 95 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒருவர் பலிமாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 207 பேர் இறந்துள்ள நிலையில், நெய்வேலியை சேர்ந்த 56 வயது நபர் நேற்று இறந்தார். இறந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை