பிரித்வி ஷா அரைசதம்: டில்லி அணி 175 ரன்கள் குவித்தது
துபாய்: சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் டில்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. டில்லி வீரர் பிரித்வி ஷா அரைசதம் அடித்து கைகொடுத்தார்.
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ஸ்ரேயாசின் டில்லியை சந்திக்கிறது. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார்.சென்னை அணியில் லுங்கிடி நீக்கப்பட்டு ஹேசல்வுட் சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் தோள்பட்டை காயமடைந்த அஷ்வினுக்குப் பதில் அமித் மிஸ்ரா, மோகித் சர்மாவுக்குப் பதில் அவேஷ் கான் இடம் பெற்றனர்.
டில்லி அணிக்கு தவான் 35 ரன் எடுக்க, பிரித்வி ஷா 43 பந்தில் 64 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.
11.4 ஓவரில் 100 ரன்களை எட்டிய டில்லி 17.2 வது ஓவரில் தான் 150 ரன்களை கடந்தது. ஸ்ரேயாஸ் 26 ரன்களுக்கு அவுட்டாகினார். டில்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பன்ட் (37), ஸ்டாய்னிஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.