திரையுலகில் இசையின் இமயமாக உயர்ந்து நின்றவர் எஸ்.பி.பி.: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
சென்னை: திரையுலகில் இசையின் இமயமாக உயர்ந்து நின்றவர் எஸ்.பி.பி என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இசைக்கடல் தன் ராக ஆலாபனை அலைகளை ஆடாமல் நிறுத்தி கொண்டது என்று துரைமுருகன் உருக்கம் தெரிவித்துள்ளார். நிரப்ப முடியாத இடம் பாலுவின் இடம். இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு எஸ்.பி.பி. புகழ் நிலைத்து நிற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.