நவீன சிகிச்சை கருவிகளுடன் புதிய ஆம்புலன்ஸ் வந்தாச்சு!

தினமலர்  தினமலர்
நவீன சிகிச்சை கருவிகளுடன் புதிய ஆம்புலன்ஸ் வந்தாச்சு!

திருப்பூர்;'வென்டிலேட்டர்' உள்ளிட்ட, அவசர சிகிச்சை கருவி வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்கள், நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.
நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்ற வசதியாக, நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களை, தமிழக அரசு வழங்கியுள்ளது. 'வென்டிலேட்டர்', ஆக்ஸிஜன் சிலிண்டர், இருதய இயக்கத்தை துாண்டும் நவீன கருவி, உயிர்காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கி உயிர்காக்கும் கருவி, கூடுதல் மருத்துவ வசதியுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்துக்கு, இரண்டு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் விஜய கார்த்திகேயன், இரு ஆம்புலன்ஸ்களையும், மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார். முன்னதாக, அவர், கூடுதல் மருத்துவ வசதிகள் குறித்து, வாகனத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை 'டீன்' வள்ளி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் சாந்தி, 108 ஆம்புலன்ஸ் இயக்கும் நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.

மூலக்கதை