சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்

தினகரன்  தினகரன்
சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்

டெல்லி: சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தை கைவிடுவதாக எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். வேளாண் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியதற்கு எதிராக மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மூலக்கதை