10 கிராமங்களைக் காப்பாற்றிய கார்த்தி!

தினமலர்  தினமலர்
10 கிராமங்களைக் காப்பாற்றிய கார்த்தி!

நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இந்த பவுண்டேஷன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர்.

தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை உழவன் பவுண்டேஷன் சுத்தப்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட பதிமூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கால்வாய் முழுவதும் செடிகொடிகளாகவும் புதர்களாகவும் இருக்கும் நிலையில் இந்த கால்வாயை சுத்தப்படுத்த ரூபாய் 4 லட்சம் உழவன் பவுண்டேஷன் செலவு செய்து உள்ளது.

கடந்த 21 நாட்களாக இந்த கால்வாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்து விட்டால் ராதாபுரம் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் எனக் கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள 10 கிராமத்தில் உள்ள பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவையை இந்த கால்வாய் பூர்த்தி செய்யும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் கல்விப் பணி ஆற்றி வருவது போல, கார்த்தியின் இந்த சமூகப்பணியையும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

மூலக்கதை