மதம் மாறினாரா சஞ்சனா கல்ராணி?
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் நிக்கி கல்ராணி. அவருடைய சகோதரி சஞ்சனா கல்ராணி. இவரும் சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் போதைப் பொருள் விவகாரத்தில் சஞ்சனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்கு அவர் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவரைப் பற்றிய விசாரணையை காவல் துறை தீவிரப்படுத்தி இருக்கிறதாம்.
இந்நிலையில் சஞ்சனா, முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டதாக ஒரு கடித ஆதாரத்துடன் செய்தி ஒன்று மீடியாவில் பரவி வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவர் முஸ்லிம் மதத்திற்கு மாறி தன் பெயரை மஹிரா என்று மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே டாக்டர் அசிஸ் பாஷா என்பவருடன் அவருக்கு திருமண நிச்சயம் நடந்த புகைப்படங்களும் வெளிவந்தன. சஞ்சனாவின் சொத்து விவகாரம், அவரது நடவடிக்கைகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.