கொரோனா பரவுதலுக்கு குடும்ப உறுப்பினர்களும் முக்கிய காரணம் ; பிரான்ஸ் சுகாதாரதுறை அமைச்சர்

தினமலர்  தினமலர்
கொரோனா பரவுதலுக்கு குடும்ப உறுப்பினர்களும் முக்கிய காரணம் ; பிரான்ஸ் சுகாதாரதுறை அமைச்சர்

பாரிஸ் : கொரோனா தொற்று பரவுவதற்கு குடும்பத்தின் கூட்டங்கள் ( அதிகமான நபர்கள் ) முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும், பிரான்ஸ் சுகாதாரதுறை அமைச்சர் ஆலிவ் வேரன் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரான்சில் கொரோனா தொற்றை குறைக்க அரசு ஏராளமான நடவடிக்கையை செயல்படுத்துகிறது. கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு குடும்பத்தின் கூட்டங்கள் முக்கிய ஆதாரமாக உள்ளன என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் கடந்த வாரங்களில் கொரோனா பரவல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் அவரது சமூக தொடர்புகளின் எண்ணிக்கையை குறைத்தால், வைரஸ் பரவுவதைக் குறைக்க முடியும். கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 100 பேரில் ஐந்து பேர் இன்று உறுதிப்படுத்தப்பட்டதாக (நேர்மறையாக) உள்ளனர், கோடைகால தொடக்கத்தில் 100 பேரில்ஒருவருக்கு தொற்று பதிவு செய்யப்படுகிறது.


இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர் கூறுகையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளை குறைக்க, சிவப்பு மண்டலங்கள் (Red Zone) என கருதப்படும் மற்ற பகுதியையும் சேர்த்து, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. லியோன் மற்றும் நைஸ் நகரங்களில் கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை பிரான்ஸ் செயல்படுத்துகிறது. ஆனால் லியோன் மற்றும் நைஸில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் வார இறுதி வரை பாரிசில் உள்ள அரசாங்கத்திடம் கூடுதல் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவமனையில் பாதிப்புகள் மற்றும் கொரோனாவுடன் தீவிர சிகிச்சை ஆகியவை அதிகரித்து கொண்டுள்ளனர். இருப்பினும், அவை வசந்த காலத்தில் எட்டப்பட்ட உச்சநிலையை விட குறைவாக உள்ளது.


நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். குறிப்பாக நான் குறிப்பிட்டுள்ள பிராந்தியங்களில், உங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க மட்டுமே நான் உங்களிடம் கேட்க முடியும். குறிப்பாக ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அத்துடன் மார்சேய், போர்டியாக்ஸ் மற்றும் குவாடலூப் ஆகியவை கூடுதல் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கொண்ட பகுதிகள். மார்சேய் மற்றும் போர்டியாக்ஸில் நடைமுறைக்கு வந்த நடவடிக்கைகள் கடற்கரை கூட்டங்களுக்கான கடுமையான விதிகள், பராமரிப்பு இல்லங்களில் முதியவர்களைப் பார்ப்பது மற்றும் வெளிப்புற பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வது ஆகியவை அடங்கும். இவ்வாறு கூறினார்.

மூலக்கதை