இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 52,14,678 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதில் 41,12,552 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10,17,754 பேர் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் ஒரேநாளில் 1,174 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,198லிருந்து 84,372ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் இதுவரை 6.15 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ICMR அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 10.06 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் கொரோனாவால் 3.03 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.50 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,50,132 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,03,33,918 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,20,19,308 பேர் குணமடைந்துள்ளனர்.

மூலக்கதை