ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஸ்ரீநகரின் பாட்டாமலூ பகுதியை போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தன.

இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

.

மூலக்கதை