குழப்பத்தில் சென்னை வீரர் | செப்டம்பர் 15, 2020

தினமலர்  தினமலர்
குழப்பத்தில் சென்னை வீரர் | செப்டம்பர் 15, 2020

துபாய்: ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் செப். 19ல் துவங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி, முதல் போட்டியில் ரோகித்தின் மும்பையை சந்திக்கிறது. இதற்கான சென்னை அணியில் இடம் பெற்ற தீபக் சகார், ருதுராஜ் என இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

சகார் இதிலிருந்து மீண்டு, அணியுடன் இணைந்து விட்டார். ருதுராஜ் நிலை மட்டும் குழப்பமாக உள்ளது. சமீபத்தில் நடந்த அடுத்தடுத்த சோதனைகளில் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்தது. இருப்பினும் ருதுராஜ் சென்னை அணி வீரர்களுடன் இணைந்து கொள்ள அனுமதி தரப்படவில்லை.

இவருக்கு அறிகுறியற்ற கொரோனா இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொரு செய்தியில், ருதுராஜ் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் எப்படியும் பங்கேற்பார்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை