அமெரிக்காவில் செல்பி எடுத்த ஆந்திரா பெண் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் செல்பி எடுத்த ஆந்திரா பெண் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இளம் பெண் கால் சறுக்கி நீருக்குள் மூழ்கி இறந்தார்.  ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா. பொறியியல் பட்டதாரியான இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக  பணியாற்றினார். அவருக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அட்லாண்டாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது வருங்கால  கணவருடன் சென்றுள்ளார்.பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும் போது, வழியில் பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் இருவரும் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். எதிர்பாராத விதமாக கால்  சறுக்கி இருவருமே நீருக்குள் வீழ்ந்துள்ளனர். அதில் கமலா நீருக்குள் மூழ்கி இறந்த நிலையில் அவரது வருங்கால கணவரை மீட்பு படையினர்  காப்பாற்றியுள்ளனர். கமலாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூலக்கதை