இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 3,842 மையங்களில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் 1.18 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதுகின்றனர். கரோனா பரவல் காரணமாக அனைத்து மையங்களிலும் முழுமையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. நீட் தேர்வு எழுத வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு வர வேண்டும். 5ி0மிலி அளவு கொண்ட சானிடைசர், உட்புறம் தெளிவாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில் கொண்டு வரலாம். நீட் தேர்வுக்குத் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேர்வு எழுத இருந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்வு மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மூலக்கதை