கொரோனா 2வது அலை: - நியூசி.,யில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
கொரோனா 2வது அலை:  நியூசி.,யில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு

வெலிங்டன்:நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில், பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், நியூசிலாந்தில் 12 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,251 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.



மையப்புள்ளி ஆக்லாந்து



இதுதொடர்பாக, அந்நாட்டு பிரதமர் ஆர்டன் கூறுகையில், வைரசானது எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரணை தொடர்ந்து வருகிறது. எனினும் அதுபற்றி இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. பாதிக்கப்பட்ட 29 பேரும் ஆக்லாந்தில் இருந்து தொற்றுக்கு ஆளானவர்கள் என தெரிய வந்துள்ளது. ஆக்லாந்து மையப் புள்ளியாக உள்ளது.

இந்த மைய புள்ளியில் இருந்து இன்னும் பல பாதிப்புகள் தெரிய வரும். பாதிப்பு குறைவதற்கு முன் அது அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 12 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது என்றார்.

மூலக்கதை