கத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு

தினமலர்  தினமலர்
கத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு

தோஹா : கத்தாரில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 303 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கத்தாரில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கத்தாரில் இன்று ஒரே நாளில் 292 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நாட்டில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,14000 ஆக உள்ளது. கத்தாரில் புதிதாக நோய் பாதிப்புகளால் 2 பேர் பலியாகினர். நாட்டில் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்தது.


கத்தாரில் ஒரே நாளில் 303 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கத்தாரில் நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 110,626 ஆக உயர்ந்தது. கத்தாரில் கடந்த 24 மணிநேரத்தில் 4,706 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கத்தாரில் இதுவரை 5,33,995 ஆக அதிகரித்தது. தற்போது நாட்டில் 3,121 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவற்றில் 449 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

மூலக்கதை