பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு

தினமலர்  தினமலர்
பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை வாகனங்களுக்கு தீ வைப்பு

பெங்களூர்: பெங்களூரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டை, வன்முறை கும்பல் சூறையாடியது. கர்நாடகாவில் பெங்களூர், புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வாக இருப்பவர் சீனிவாச மூர்த்தி.

இவரது தங்கை மகன் நவீன், 23.சமூக வலைதளத்தில், ஒரு மதத்தை சேர்ந்தவர்களை, சர்ச்ச்சைகுரிய வகையில், நவீன் விமர்சித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, புலிகேசி நகரில் உள்ள எம்.எல்,ஏ., வீட்டின் முன், நேற்றிரவு கூடிய கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடைத்த அந்த கும்பல், கற்களை வீசி, வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்தது.


இதற்கிடையில், எம்.எல்,.ஏ., சீனிவாச மூர்த்தியும், நவீனும், அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, அந்தகும்பல், காவல் நிலையத்துக்கு சென்று, வன்முறையில் ஈடுபட்டது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தது. துப்பாக்கிச் சூடு நடத்தி, வன்முறையை கட்டுப்படுத்த போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதன் பேரில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, வன்முறையை கட்டுபடுத்தினர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. புலிகேரி நகரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

மூலக்கதை