விரைவில் இடியுடன் கூடிய மழை - சிம்பு பற்றி பார்த்திபன் டுவீட்

தினமலர்  தினமலர்
விரைவில் இடியுடன் கூடிய மழை  சிம்பு பற்றி பார்த்திபன் டுவீட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்புவைப் பாராட்டி பேசியிருந்தார். அதில், 'சிம்பு ஒரு சுயம்பு' என பார்த்திபன் பாராட்டியிருந்தார். பார்த்திபனின் இந்த பாராட்டினால் சிம்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் உதவியாளர் மூலம் பார்த்திபனுக்கு பூங்கொத்து அனுப்பி நன்றி தெரிவித்துள்ளார்.

இது பற்றி பார்த்திபன் வெளியிட்டுள்ள டுவீட்டில், "சுயம்பு' சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட, உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார். மிஸ்டர். சிம்பு நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் எண்ணப் புத்தகத்தில்!. “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து இன்னும் ஏன் வொர்க் பண்ணலேன்னு”. அதாகப்பட்டது.... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!" எனத் தெரிவித்துள்ளார். கூடவே சிம்பு அனுப்பிய பூங்கொத்தின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

பார்த்திபனின் இந்த டுவீட் மூலம், விரைவில் சிம்பு - பார்த்திபன் இணைந்து நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை