தளர்வுடன் ஊரடங்கு: இன்று முதல் அமல்

தினமலர்  தினமலர்
தளர்வுடன் ஊரடங்கு: இன்று முதல் அமல்

சென்னை : தமிழகத்தில், தளர்வில்லாத முழு ஊரடங்கு, நேற்று நிறைவடைந்தது. இன்று(ஆக.,10) முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில், இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


நேற்று மாநிலம் முழுதும், எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன், முழு ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

மூலக்கதை