சவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் மீட்பு

தினமலர்  தினமலர்
சவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் மீட்பு

ரியாத் : சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 1,599 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சவுதியில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. நோய் தொற்றால் இன்று புதிதாக 1,428 பேர் பாதிக்கப்பட்டனர். நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,88,690 ஆக அதிகரித்தது. சவுதியில் புதிதாக 37 பேர் பலியாகினர். நாட்டில் கொரோனாவால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,167 ஆக உயர்ந்தது.


சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 1,599 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து 2,52,039 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 33,484 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 1,816 பேர் அதிதீவிர சிகிச்சையில் உள்ளனர்.

மூலக்கதை