பிரிட்டனில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்: போரிஸ் ஜான்சன்

தினமலர்  தினமலர்
பிரிட்டனில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்: போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரிட்டனில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அவசியம் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

'கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பிரிட்டனில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது பிரிட்டனில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இனி மேலும் பள்ளிகளை மூடுவது நல்லதல்ல. பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.


மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும்' இவ்வாறு போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

மூலக்கதை