அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன்

தினமலர்  தினமலர்
அடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன்

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர் மீரா மிதுன். சமீபகாலமாக ரஜினி, கமல், விஜய், சூர்யா என திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதிலும் சில தினங்களாக விஜய், சூர்யாவின் மனைவி மற்றும் குடும்பத்தாரை தரக்குறைவாக பேசி வருகிறார். இதனால் அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார் மீரா மிதுன். அதன் துவக்கவிழா டில்லியில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்

ஏற்கனவே அவர் முன்னணி திரைப்பிரபலங்கள் பற்றி சகட்டுமேனிக்கு பேசி வருவதன் பின்னணியில் பெரிய தயாரிப்பாளர் ஒருவர் இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது மீரா மிதுனும் தயாரிப்பாளராக ஆவதன் மூலம் அந்த சந்தேகம் மேலும் உறுதியாகியுள்ளது.

மூலக்கதை