அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. தர்மபுரி, சேலம், தஞ்சாவூர்,  திருவாரூர், நாகை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை