சிலரால் சாக்கடை ஆகும் சமூக வலைத்தளங்கள்

தினமலர்  தினமலர்
சிலரால் சாக்கடை ஆகும் சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சிலரும், தமிழ் சினிமா ஹீரோக்களின் ரசிகர்கள் சிலரும், சமூக வலைத்தளங்களை சாக்கடை ஆக்கி வருகிறார்கள்.

அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையில் தான் இம்மாதிரியான சமூக வலைத்தள சண்டை அதிகமாக நடக்கும். ஆனால், கடந்த சில வாரங்களாக பிரபலங்களுக்குள் சண்டை நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வனிதா விஜய்குமாரின் மூன்றாவது திருமணத்தை மையமாக வைத்து சமூகவலைதளங்களில் கேவலமான சண்டைகள் நடந்தன. ஆரம்பத்தில் ரசிகர்களிடம் தொடங்கிய சண்டை பின்பு லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்ற திரைப்பிரபலங்களும் உள்ளே வந்தது இன்னும் களேபரம் ஆனது. வனிதா சில தரமற்ற வார்த்தைகளை உபயோகிக்க பதிலுக்கு இவர்களும் பேசியது குழாயடி சண்டையை விட மோசமாக சென்றது.

இந்த பிரச்னை ஓய்ந்த நிலையில் அதற்கடுத்து, கடந்த சில நாட்களாக நடிகை மீரா மிதுன், நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரையும் அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அதற்கு அவர்களின் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

இருப்பினும் மீரா மிதுன் விடாமல் தொடர்ந்து வீடியோ பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். அவரது கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் மிகவும் கேலமான, தரக்குறைவான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதன்மூலம் சமூக வலைத்தளங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடையாக மாறி சமூகத்தைக் கெடுக்கும் வேலையையும் ஆரம்பித்துவிட்டதாக பலர் நினைக்கிறார்கள்.

மூலக்கதை