கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்

தினமலர்  தினமலர்
கொரானோ நெகட்டிவ்  அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அமிதாப், அபிஷேக் இருவரும் உடனடியாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். ஐஸ்வர்யா, ஆராத்யா ஆகியோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன்பின் சில நாட்கள் கழித்து இவர்கள் இருவரும் மருத்துமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் பரிசோதனை நெகட்டிவ் ஆனதால் டிஸ்சார்ஸ் ஆகி வீடு திரும்பினர். அதற்கடுத்த சில நாட்களில் அமிதாப்புக்கும் நெகட்டிவ் வந்ததால் அவரும் வீட்டிற்குச் சென்றார்.

அபிஷேக் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலேயே இருந்தார். அபிஷேக்கிற்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. அதனால், அவரை வீடு திரும்ப உள்ளார்.

“சத்தியம் சத்தியம். இன்று பிற்பகல் எனக்கு மேற்கொண்ட கொரோனா சோதனையில் நெகட்டிவ் என வந்தது. இந்த நோயை வெல்வேன் என்று உங்களிடம் சொல்லியிருந்தேன். எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு என் நன்றி. டாக்டர்கள், நர்சுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்று அபிஷேக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன் சமூகவலைதளத்தில், அபிஷேக்கிற்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆகிவிட்டார். அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை