கோழிக்கோடு விமான விபத்து: பயணிகள், மீட்புப் படையினர் உள்ளிட்ட 500 பேர் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை

தினகரன்  தினகரன்
கோழிக்கோடு விமான விபத்து: பயணிகள், மீட்புப் படையினர் உள்ளிட்ட 500 பேர் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை

கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள், மீட்புப் படையினர், பொதுமக்கள் உள்பட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கேரள விமானத்தில் வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\r நேற்று மாலை துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் செயல்பட்டபோதும், விமானநிலையம் அமைந்திருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இந்த விபத்தைக் காண கூடிவிட்டனர். இதனால், கொரோனா சூழலால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. கொரோனா சூழலில் ஊரடங்கு அறிவித்திருப்பதோடு சமூக பரவல் உண்டாவதைத் தடுக்க சமூக இடைவெளியை மாநில அரசுகள் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளன. ஆனால் நேற்றைய விபத்தின்போது கோழிக்கோடு மக்கள் இதனை கடைபிடித்ததாக தெரியவில்லை.\r கூட்டமாக விமான விபத்தை பார்த்தனர். மேலும், விமான விபத்தில் சிக்கிய 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனா இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான விபத்தை பார்க்க கூடிய கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அறிவித்திருக்கிறார்.

மூலக்கதை