ஜெய்சங்கர் - போம்பியோ பேச்சு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: மத்திய வெளியுறவு துறை அமைச்சர், ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ உடன் தொலைபேசியில் உரையாடினார்.அப்போது, இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தி, ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளில், பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து, இருவரும் பேச்சு நடத்தினர்.

மூலக்கதை