பிணை கைதிகள் விடுவிப்பு

தினமலர்  தினமலர்

பாரீஸ்: பிரான்சில், லீ ஹாவ்ர் நகரில் உள்ள வங்கியில் புகுந்த ஒரு இளைஞர், துப்பாக்கி முனையில், ஆறுபேரை பிணைய கைதிகளாக பிடித்துக் கொண்டார். அவரிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பேச்சு நடத்தினர்.முடிவில், அனைவரையும் விடுதலை செய்து, அந்த இளைஞர் சரணடைந்தார். அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்படுவதாக தெரிவித்த, போலீசார், மிரட்டலுக்கு பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கியாக இருக்கலாம் என, கூறினர்.

மூலக்கதை