உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு ஆர்எல்எப்-100 எனும் புதிய மருந்து: அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

தினகரன்  தினகரன்
உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு ஆர்எல்எப்100 எனும் புதிய மருந்து: அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

ஹூஸ்டன்: கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் குணப்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் RLF-100 (அவிப்டாடில்) எனும் மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த மருந்தை உயிருக்குப் போராடும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்க அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்த மருந்தை அளிக்கும் போது நுரையீரல் தொடர்பான பாதிப்பிலிருந்து கொரோனா நோயாளிகள் மிக விரைவாக மீண்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\r ஹூஸ்டனில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முதன்முதலாக ஆர்எல்எப்-100 மருந்தை, தீவிரமான பாதிப்பில் இருந்த கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதித்தனர். இந்த மருந்து அளிக்கப்பட்ட சில நாட்களில் நுரையீரல் பாதிப்பிலிருந்து மிக வேகமாக குணமடைய தொடங்கியதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நியூரோ ஆர்எக்ஸ் மற்றும் ரிலீப் தெரப்படிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளன. கொரோனா நோயாளிகள் நுரையீரல் பாதிப்பிலிருந்து அவிப்டாடில் மருந்து குணப்படுத்துகிறது என்று நியூரோஆர்எக்ஸ், தனியார் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\r ஏறக்குறைய 15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தீவிரமான தொற்றுக்கு ஆளாகி வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தனர். அவர்களுக்கு அவிப்டாடில் மருந்தை அளித்து பரிசோதித்தபோது அவர்கள் 4 நாட்களில் நுரையீரலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, நுரையீரலில் இருக்கும் தொற்றை வேகமாக இந்த மருந்து குணப்படுத்தி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக 50 சதவீதத்திற்கும் மேலாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்துகிறது என்று தெரியவந்துள்ளது.

மூலக்கதை