பரமக்குடி காவல்நிலையத்தில் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பற்றி எஸ்.பி விசாரணை
பரமக்குடி: பரமக்குடி காவல்நிலையத்தில் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பற்றி எஸ்.பி.வருண்குமார் விசாரணை நடத்தி வருகிறார். நிலத் தகராறில் ஒரு பிரிவினர் தம்மையும், தந்தையையும் தாக்கியதாக கூடலிங்கம்(25) புகார் அளிக்கச் சென்றுள்ளார். புகார் அளிக்கச் சென்ற இளைஞர் கூடலிங்கம் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.