சகோதரர் ராகுலுக்கு பிரியங்கா வாழ்த்து

தினமலர்  தினமலர்
சகோதரர் ராகுலுக்கு பிரியங்கா வாழ்த்து

புதுடில்லி: 'ராகுலைப் போன்ற ஒரு சகோதரர் கிடைத்ததற்கு, நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதற்காக பெருமைப்படுகிறேன்' என, ரக் ஷா பந்தன் தினத்தையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் விழா, நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: அன்பு, பொறுமை, பணிவு ஆகியவற்றை, என் சகோதரர் ராகுலிடமிருந்து தான், கற்றுக் கொண்டேன். அவரைப் போன்ற ஒரு சகோதரர் கிடைத்ததற்கு, நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்காக பெருமைப்படுகிறேன்.

சந்தோஷம், துக்கம் போன்ற நிகழ்வுகளில் எப்போதும் ஒன்றாகவே இருந்துள்ளோம். ரக் ஷா பந்தன் விழா கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இவ்வாறு, தெரிவித்துள்ள பிரியங்கா, அதில், ராகுலுடன், தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

பிரதமருக்கு வாழ்த்து


பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாதா அமிர்தானந்தமாயி, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோர், ரக் ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

லதா மங்கேஷ்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,'கொரோனா வைரஸ் காரணமாக, இந்தாண்டு ராக்கி அனுப்ப முடியவில்லை. நாட்டுக்காக கடுமையாக உழைக்கிறீர்கள். 'உங்களை நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்த நல்ல நாளில், நாட்டை புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்வீர்கள் என்ற உறுதியை மட்டுமே எதிர்பார்க்கிறேன்' என, தெரிவித்து உள்ளார். இதையடுத்து, தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை