நடன கலைஞர்களுக்கு டைகர் ஷெராப் உதவி

தினமலர்  தினமலர்
நடன கலைஞர்களுக்கு டைகர் ஷெராப் உதவி

கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த 4 மாதமாக இந்திய திரையுலகம் முடங்கி கிடக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தாலும் அவர்களுக்கு பொருளாதார பிரச்சினை இல்லை. ஆனால் தினக்கூலி பணியாளர்களாக இருக்கும், நடன கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள நடன கலைஞர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி செய்து வருகிறார். அதேபோல பாலிவுட்டில் வேலை இழந்து தவிக்கும் நடன கலைஞர்களுக்கு நடிகர் டைகர் ஷெராப் உதவி வருகிறார். ஊரடங்கு துவக்க காலத்தில் 100 நடன கலைஞர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தினார்.

தற்போது 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களின் உணவுத் தேவையை ஒரு மாதத்திற்கு பூர்த்தி செய்யும் வகையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, கோதுமை, மளிகை சமான்களை அனுப்பி வைத்துள்ளார். இதற்கு பாலிவுட் நடன கலைஞர்கள் சங்கம், டைகர் ஷெராப்புக்கு நன்றி தெரிவித்து உள்ளது.

மூலக்கதை