மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்துடன் பேச அனுமதி

தினகரன்  தினகரன்
மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்துடன் பேச அனுமதி

புதுடெல்லி: மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ கான்பிரன்சிங்கில் பேச அனுமதிக்கும்படி மாநில, யூனியன் பிரதேச அரசுளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்கள் செல்போன்கள் மூலமாக குடும்பத்தினர், உறவினருடன் பேச அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வீடியோ கான்பிரன்சிங்கில் பேச அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், நோயாளிகள் குடும்பத்தினரை நேரில் பார்க்க முடியாமல், குடும்பத்தை விட்டு பிரிந்தது போன்ற உணர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய அரசின் சுகாதாரப் பணிகள் இயக்குநர் ராஜிவ் கார்க் எழுதியுள்ள கடிதத்தில், ‘குடும்பத்தினருடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசுவதால் ஏற்படும் சமூக பிணைப்பினால் நோயாளிகள் அமைதி அடைவார்கள்.  எனவே, தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகள், தங்களின் ஸ்மார்ட் போன், டேப்லட் உதவியுடன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேச அனுமதி அளியுங்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.* நோயாளிகள் பதிவேடு: ஐசிஎம்ஆர் திட்டம்இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை தாண்டி விட்டது. இதுவரை மருத்துவமனைகளில் இந்த நோயாளிகளுக்காக தனியாக பதிவேடு எதுவும் பராமரிக்கப்படவில்லை. இதனால், நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் பற்றிய தகவல்கள் பராமரிக்க தனி பதிவேடு கொண்டு வர ஐசிஎம்ஆர் திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை