ஊரடங்கு காலத்தில் போதைக்கு அடிமையானதால் விபரீதம்; கணவனை கொன்று ‘உப்பு கண்டம்’ போட்ட மனைவி: ரஷ்யாவின் பிரபல பாப் பாடகருக்கு நேர்ந்த சோகம்

தினகரன்  தினகரன்
ஊரடங்கு காலத்தில் போதைக்கு அடிமையானதால் விபரீதம்; கணவனை கொன்று ‘உப்பு கண்டம்’ போட்ட மனைவி: ரஷ்யாவின் பிரபல பாப் பாடகருக்கு நேர்ந்த சோகம்

மாஸ்ேகா: ஊரடங்கு காலத்தில் போதைக்கு அடிமையான ரஷ்யாவின் பிரபல பாப் பாடகரான கணவனை கொன்று ‘உப்பு கண்டம்’ போட்ட மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்த ‘ராப்பர்’ எனும் பிரபல பாப் இசை பாடகர் ஆண்டி கார்ட்ரைட் என்று அழைக்கப்படுவர் அலெக்சாண்டர் யுஷ்கோ (30). இவரது மனைவி மெரினா குகா (25). இவர்களுக்கு இரண்டு வயது மகன் உள்ளார். கடந்த 1990ம் ஆண்டில் உக்ரேனிய நகரமான நிஜினில் பிறந்த ஆண்டி கார்ட்ரைட், ‘ராப்பர்’ இசை பாடல் மூலம் ரஷ்யாவில் லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற புகழ்பெற்ற பாடகர். இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பதியர் இருவருக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆவேசமடைந்த மெரினா குகா, மது போதையில் இருந்த தன் கணவன் ஆண்டி கார்ட்ரைட்டை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, கூர்மையான கத்தியால் தனது 2 வயது மகன் கண்முன்பே ஆண்டி கார்ட்ரைட்டை குத்திக் கொலை செய்தார். இவ்விவகாரம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக கணவனின் உடலின் பாகங்களை கசாப்பு கடையில் ஆடு, மாடுகளை வெட்டுவது போல் தனித்தனியாக வெட்டி எடுத்தார். வீடு முழுவதும் ரத்த கறை வெள்ளமாக பரவிக் கிடந்ததால், அவற்றை சோப்பு நீரை பயன்படுத்தி கழுவிவிட்டார். அதன்பின்னர், துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை, சலவை இயந்திரத்தில் (வாஷிங் ெமஷின்) போட்டு கழுவினார். பிறகு உடல் துண்டுகளை  உப்பு தடவி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்தார். இவ்வளவு ேமாசமான கொடூர கொலையை செய்துவிட்டு, வழக்கம்போல் மெரினா குகா தனது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால், ஆண்டி கார்ட்ரைட்டின் நண்பர்கள், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். ஒருகட்டத்தில் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மெரினா குகாவிடம் விசாரித்தனர். அவர், மழுப்பலாக பதிலளித்தார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர், தனது கணவரை கொன்று உடல் பாகங்களை கண்டங்களாக போட்டு உப்பு தடவி, குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார், உடல் பாகங்களை கைப்பற்றி, தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் மெரினா குகாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாடகர் ஆண்டி கார்ட்ரைட் மரணம், ரஷ்யாவில் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலனாய்வு போலீசார் கூறுகையில், ‘சம்பவ நாளன்று ஆண்டி கார்ட்ரைட் மதுபோதையில் இருந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவு மது, போதை பொருள் பயன்படுத்தி வந்ததாக அவரது மனைவி மெரினா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனால், குடும்பத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆண்டி கார்ட்ரைட்டை கத்தியால் குத்திக் கொன்றார். இதற்கு கூரிய கத்திகள், சுத்தியல், பிளாஸ்டிக் பக்கெட், இறைச்சியை வெட்டும் பலகை போன்ற ஆயுதங்களைப்  பயன்படுத்தி உள்ளார். கொலை  வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடக்கிறது. கொலை சம்பவத்திற்கு மெரினாவின்  தாய் அவருக்கு உதவியுள்ளார். தற்போது மெரினா குகா கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

மூலக்கதை