அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்ய டிரம்ப் முடிவு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்ய டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

சீன செயலியான டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியா தடை விதித்தது. இதையடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க செனட்டர்கள், மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், டிக் டாக் செயலியை தங்கள் நாட்டில் தடை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறியது, அமெரிக்காவில் டிக்டாக்கை பொறுத்தவரை டிக் டாக் மற்றும் சீனாவுடன் தொடர்புடைய பிற செயலிகள் மீதான தடையை பரிசீலித்து வருகிறோம். டிக்டாக்கிற்கு பதிலாக பரந்த அளவில் மாற்றுவழியை யோசித்து கொண்டிருக்கிறோம் என்றார்.

சீன செயலியான டிக் டாக்கை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு கடந்த ஜூலையில் அமெரிக்கா செனட் குழு ஒப்புதல் அளித்த குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை