‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி

வாஷிங்டன்: அமெரிக்க மக்களை கட்டாயமாக ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது என்று அதிபர் டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 38. 33 லட்சம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 17. 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 1. 42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசும், அரசியல் தலைவர்களும் மக்களை கட்டாயமாக மாஸ்க் அணியும்படி உத்தரவிட வேண்டுமென அமெரிக்காவின் முன்னணி தொற்று நோயியல் வல்லுநரான அந்தோணி ஃபவுசி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘மக்கள் எல்லோரும் மாஸ்க் அணிந்துவிட்டால் கொரோனா மறைந்துவிடும் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. மாஸ்க் அணிவது அவசியம் இல்லை என கூறிய அனைவருமே தற்போது மாஸ்க் அணிய வேண்டுமென கூறுகின்றனர்.

மாஸ்க் அணிவதால் பல்வேறு பிரச்னைகளும் வரும் என்பது நமக்கு தெரியும். அமெரிக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமென உத்தரவிட முடியாது.

ஏனென்றால் மக்களுக்கு தனிச் சுதந்திரம் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை