அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் தொற்று வெகுவாக குறைந்துள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை : அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் தொற்று வெகுவாக குறைந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் தொற்று குறைந்து வருவதைப் போல மற்ற மாவட்டங்களிலும் குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து தரப்பும் பயனடையும் வகையில் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.