கருப்பர் கூட்டம் யூடியூப் விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

தினகரன்  தினகரன்
கருப்பர் கூட்டம் யூடியூப் விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை : தமிழகத்தில் மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் கடைபிடித்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பதிவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருப்பர் கூட்டம் யூடியூப் விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். முன்னதாக விழுப்புரம், கடலூர் எல்லையான சின்னக்கள்ளிப்பட்டியில் ரூ.33 கோடியில் புதிய தடுப்பணைக்கு அமைச்சர் சண்முகம் அடிக்கல் நாட்டினார்.

மூலக்கதை