ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் உடனே திறந்து விட தமிழகம் கோரிக்கை

தினகரன்  தினகரன்
ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் உடனே திறந்து விட தமிழகம் கோரிக்கை

டெல்லி: ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை வைத்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 30வது கூட்டத்தில் தண்ணீர் திறந்துவிட தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 9 டிஎம்சி நீர் தான் கிடைத்துள்ளது என தமிழகம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.\r காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் இன்று காணொலி காட்சி மூலமாக நடத்தப்பட்டது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இதில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் மாதத்திற்கு ஒருமுறை நடந்து வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. காணொலி காட்சி வாயிலாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். சென்னையில் இருந்தபடி இந்த கூட்டத்தில் திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலக்கதை