தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் காற்றின் திசைவேக மாறுபடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர்,வேலூர், தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.