ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கை விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தினகரன்  தினகரன்
ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கை விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி: ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கை விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக, ராணுவ வீரர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ராணுவ கொள்கை விதிகள் வகுக்கப்பட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து காஷ்மீரில் பணிபுரியும் லெப்டினன்ட் கர்னல் பி.கே.சவுத்ரி டெல்லி உயநீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராணுவ வீரர்கள் குடும்பத்தைப் பிரிந்து தொலைதூரத்தில் கஷ்டமான வானிலை, கடினமான நிலப்பரப்பில் பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தங்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள் குடும்ப இடைவெளியை ஈடுசெய்கிறது. எனவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று ராணுவ புலனாய்வுத்துறை பொது இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கானது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மூலக்கதை