பாக்.,கில் கொரோனா பாதிப்பு 2.5 லட்சத்தை கடந்தது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,753 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,625 ஆக உள்ளது. ஒரே நாளில் புதிதாக 69 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை பாக்கில் கொரோனாவுக்கு 5,266 பேர் பலியாகி உள்ளனர்.
பெருந்தொற்றிலிருந்து அந்நாட்டில் இதுவரை மொத்தம் 1,61,917 பேர் குணமடைந்தனர். அதிக பட்சமாக சிந்து மாகாணத்தில் 1,05,533 பேரும் பஞ்சாப் மாகாணத்தில் 87,043 பேரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்துதல் தொடர்பாக லாகூர் போன்ற முக்கிய நகரங்களில் தேசிய அளவிலான கூட்டங்களுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது. சிந்து மாகாண கவர்னர் அனைத்து மக்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் படி வலியுறுத்தி உள்ளார்.