டீசல் விலை உயர்வை கண்டித்து மதுராந்தகத்தில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுராந்தகம்: டீசல் விலை உயர்வை கண்டித்து மதுராந்தகத்தில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகத்தில் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சாலை வரியை ரத்து செய்யவும், சுங்கச் சாவடிகளை அகற்றவும் கோரி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.