நாங்கள் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம், நாங்கள் சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்கிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

தினகரன்  தினகரன்
நாங்கள் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம், நாங்கள் சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்கிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

வாஷிங்கடன்: நாங்கள் எல்லோரையும் விட அதிகமாக கொரோனா பரிசோதனை நடத்துகிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். அமெரிக்காவில் இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மேலும் 1,37,000-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தினசரி 50 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என வேதனை தெரிவித்தார். எனவே ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற பெரிய நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா சோதனைத் திட்டம் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.அமெரிக்கா \'மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது\' எனவும், வேறு எந்த நாட்டையும் விட எங்கள் சோதனை திட்டம் விரிவானவை என கூறினார். மேலும் நாங்கள் 4.5 கோடி சோதனைகளை நடத்தி உள்ளோம் என கூறினார். நாங்கள் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் எனவும், நாங்கள் சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்கிறோம் என தெரிவித்தார். விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்தார். சீனா உலகுக்கு என்ன செய்திருக்கிறது. சீனா உலகத்திற்கு செய்த கொடுமையை மறந்துவிடக்கூடாது என கூறினார். கொரோனாவை சீனா பிளேக், சீனா வைரஸ் என்று அழைக்கலாம் எனவும், அதற்கு சுமார் 20 வெவ்வேறு பெயர்கள் உள்ளன என தெரிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் அப்படியே உள்ளது என கூறினார்.

மூலக்கதை